Saturday 30 April 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 3

Rate this posting:
{[['']]}
அப்பாடி


அப்பாடி ஒருவழியா... புதுவீட்டுக்கு குடித்தனம் வந்தாச்சு...


கொசுவர்த்தி சுருள் சுழலுகிறது.... 45 வருடம் முன்னால்.... ஒரு பாட்டி அரக்கப்பறக்க கிராமத்திலிருந்து எப்பாவது வரும் பேருந்தை மூன்று மைல் நடந்து வந்து மணிக்கணக்கில் காத்திருந்து கையில் அதிரசத்தை சுட்டெடுக்க இரவு முழுதும் கண்விழித்து அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாமல் தயார்செய்து ஒரு வெளுத்துப்போன மஞ்சப்பையில் போட்டுக் கொண்டு கோட்டையை நோக்கி பயணிக்கிறார்... பேருந்து, சின்னையாபிள்ளை சத்திரத்தில் இறக்கிவிட.. மகனையும் மருமகளையும் பார்க்கும் ஆவலில் நடையை எட்டிப்போட்டு அடுத்த அரைமணியில் அடுக்கடுக்கான இண்டு இடுக்கில் கட்டப்பட்ட ஓட்டுவீடுகளில் ஒன்றில் வாசலில் நிற்கவும், கதவில் தொங்கிய பூட்டைக்கண்டவுடன் பாட்டிக்கு ஆவல் சட்டென இறங்கியது..அடுத்தவீட்டில் இருந்த அருக்காணி அக்கா பரபரப்புடன் வந்து, பாட்டியை (இது அந்தக்காலம்) வரவேற்று தன்வீட்டில் அமரவைத்து காப்பி தண்ணீ கொடுக்கிறார்.. அப்போதான் அந்த செய்தியை ரோட்டில் சைக்கிளில் சென்ற ஒருவர் அந்த ஒண்டுகுடுத்தனக்காரர்களுக்கு தெரிவித்து
செல்லவும், அந்த செய்தி வீடுமாறி வீடுமாறி அருக்காணி வீட்டிற்கு வரவும் தான்  பாட்டிக்கே தெரியவந்தது.. 1 மணி முன்னால்தான் தனது மகனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் பேரன் பிறந்திருக்கிறான்னு... 

இன்று... அந்தபேரனின் லேப்டாப் உயிர்ப்பிக்க, இந்த கதையை தட்டச்சு செய்யும் பொழுது அந்தப்பாட்டி எப்பொழுதோ போய்சேர்ந்திருந்தாள்.. பேரன் பிறந்தஉடன், அவனது அப்பாவிற்கு அடுத்தடுத்து அதிர்ஷடமும் வாய்ப்புகளும் வந்து சேர,, தான் சிறியஅளவில் பார்த்து வந்த டைலர் கடையை விரிவுபடுத்தி கிட்டத்தட்ட 30 நபர்கள் வேலைசெய்யும் அளவிற்கு வளர, சொந்தமாக கடைவீதியில் கடையும், குடியிருக்க மாடிவீடும் கட்டிக்கொண்டு, ஸ்கூட்டரில் தினந்தோறும் கடைக்கு செல்லவும், தொழில் நிமித்தம் ஏரியாவில் பிரபலமாகவும் வாய்ப்பாகவும் அமைந்தது. நாளொருபொழுதும், தனது மகன் வளர்ந்து வந்தாலும், தனது தொழிலேயே மொத்த கவனமும் இருந்தததால், அந்த மகன் தானாகவே எல்லாவற்றையும் கற்று அப்படி இப்படின்னு அலைந்து திரிந்து ஒரு சுபயோக தினத்தில் நல்லவேலையிலும் அமர்ந்துவிட்டார்.

அவ்வப்பொழுது, அந்தமகனுக்கு தனது அப்பா மேல் வெறுப்பு வரும் அளவிற்கு எந்தவிதமான கவனமும் தன்னிடம் காண்பிக்கவில்லைன்னு எண்ணிக்கொண்டு, வெறுப்புடனும், அடிக்கடி சண்டையிட்டும்
ஆனால் கூடவே இருந்தும் வந்துகொண்டிருந்தார். இப்படியே தினமும் வருடங்களும் நகர, அப்பா பார்த்த பொண்னையை கட்டிக்கொண்டும், ஆனொன்றும், பெண்ணொன்றுமாய் தகுந்த இடைவெளியில் பெற்றுக்கொண்டும் நமம் கதைமாந்தரின் வாழ்க்கை மனையிட்ம் சண்டையிட்டுக்கொண்டும் அப்பாவிடம் அம்மாவிடம் அவ்வளவாக ஒட்டாமலும் ஆனால், அதே வீட்டில் வளையவந்துகொண்டிருந்தார். மகன் சம்பாதித்தாலும், தனக்கென ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளவோ
வாங்கிவைக்கவோ முய்ற்சிசெய்யாமல் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்க,உறவினர்களோ சொந்தமா ஒரு வீடு  வாங்க யோக்கிதை இல்லைன்னு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பார்க்கும்பொழுது ஜாடையாகவோ எப்படியோ பேசியது எல்லாம் இவருக்கு தெரிந்திருந்தது. விலைவாசியோ விர்ன்னு இறக்கைகட்டி ரியல் எஸ்டேட் தூக்கிசெல்ல ஒருகட்டத்தில் ஒரளவிற்கு நியாமான சேமிப்புகளை வைத்திருந்தும், மகனால்  ஒரு வீட்டைவாங்க இயலாமல் போய்விட்டது. 

இதுபோன்ற ஒரு சுபதின்த்தில்தான், அப்பாவிடம் எதையோ கேட்டு சண்டையிட, சத்தம் வலுத்து, சண்டை சமாதானம் செய்ய இயலாமல் அம்மா தவிக்க அப்பாவின் வாயிலிருந்து வந்தது.. நான் எனது சொத்துக்களைஎல்லாம் மடத்திற்கு எழுதிவைத்து உங்களை எல்லாம் தவிக்கவிட்டுவிடுவேன்னு... எதற்குமே அசராமல் இருந்த நம்மாளுக்கு
தேள்கொட்டியது போலாகிவிட்டது. அடடா, அப்பா பிடிவாதக்காரர் ஆயிற்றே உண்மையில் அப்படி செய்து விட்டால் நாம தெருவில்தான் போய் நிக்கனும்னு தோன, உடனே தனக்கென ஒரு எலிவளைசிக்குமா அதுவும்
தனது சக்திக்கேற்றவாறு இருக்குமான்னு மனைவிடம் புலம்ப.. நீண்டநாள்களாக மனவொற்றுமை இல்லாமல் இருந்த மனைவியும் இந்த விஷயத்தில் தூபமிட பத்தாதற்கு பிள்ளையும், பெண்னும் எனக்கென எந்த சொத்தை நீ வாங்கி வைத்திருக்கிறாய்ன்னு பிடிங்கி எடுக்க, பல்ஸரை ஸ்டார்ட் செய்து ஊரை வலம் வர ஆரம்பிச்சாரு நம்மாளு.  கட்டியவீடு, காலிஇடம், அடுக்குமாடி, சின்னது பெரிது, டவுனுக்குள் உள்ளே வெளியேன்னு 3 மாதத்தில் 100 கணக்கானவைகளைப் பார்வையிட்டு தனக்கென ஒரு வீட்டையயும் பிடித்து அனைத்து சாங்கியங்களையும் செய்து முடித்து இன்றுதான் .... அப்பாடி ஒருவழியா... புதுவீட்டுக்கு குடித்தனம் வந்தாச்சு...


பின்குறிப்பு... பிற்பாடு எனது உறவினர் மூலமாய் தெரியவந்தது, உண்மையில் எனது அப்பாவிற்கு நான் தனியாக ஒரு வீட்டைக்கட்டிப்பார்க்க வேண்டும் ஆசையாம் மகனுக்கு அப்பா வீட்டிலேயே இருக்க ஆசையாம், அதனால் அப்பா என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறான் என்று பிளான் செய்து தனது சொத்தை மடத்திற்கு எழுதிவைக்கப்போகிறேன்னு பிட்டைப்போட்டாராம்... 
என்னாடா நடக்குது இங்க ? அப்பா உண்மையில் வில்லனா, நாயகனா,,, ஸ்ஸ்...... முடியல..... நீங்களே சொல்லுங்க நெட்டிசன்ஸ்.